இந்தியா

தெலுங்கானாவில் பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்த காட்சி.

'நாட்டு நாட்டு' பாடல் பாடி பிரியங்கா காந்தி பிரசாரம்: கட்சிகள் இடையே ரகசிய தொடர்பு உள்ளதாக ஆவேசம்

Published On 2023-11-20 06:22 GMT   |   Update On 2023-11-20 06:23 GMT
  • பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள சந்திரசேகரராவ் கட்சி அரசை தூக்கி எறியுங்கள்.
  • மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு பாடல் பாடினார். அதில் வருவது போல் தெலுங்கானாவில் ரகசிய தொடர்பு உள்ளது என கூறினார்.

தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க, சந்திரசேகரராவின் பிஆர்எஸ் மற்றும் ஒவைசி கட்சிகள் ஒரு கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.

நாட்டு நாட்டு பாடலைப் போல் அவர்களுக்குள் ரகசிய தொடர்பு உள்ளது. நாட்டு நாட்டு பாடலை ரசியுங்கள். ஆனால் பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள சந்திரசேகரராவ் கட்சி அரசை தூக்கி எறியுங்கள்.

பாராளுமன்றத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக சந்திரசேகர ராவ் கட்சி செயல்பட்டுள்ளது. அந்த கட்சிகள் இடையே ரகசிய கூட்டணி உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சந்திரசேகர ராவ் கட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களை எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்க பிரதமர் அனுமதிக்க மாட்டார். மேலும் தெலுங்கானாவில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் பேசமாட்டார்.

அதே நேரத்தில் தவறுகள் எதுவும் செய்யாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற எதிர்க்கட்சியினர் மீது விசாரணை அமைப்புகளை பிரதமர் ஏவி விடுவார், ரகசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியைச் சேர்ந்த அசாதுதீன் ஒவைசி வட மாநிலங்கள் வரை வந்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவார்.

ஆனால் தெலுங்கானாவில் 19 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடமாட்டார் .

ஏனென்றால் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியை ஆதரிக்கிறார் .நீங்கள் அந்த 3 கட்சிகளில் எதற்கு வாக்களித்தாலும் அவர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள்.

எனவே மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது.

அவரால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியவில்லை.

அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்காக அரசியல் அதிகாரத்தை பெறுவது பகிர்ந்து அளிப்பதில் தான் அவரது கவனம் உள்ளது.

இனி அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் மாநிலத்திற்கு நன்மை வேண்டுமென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்.

மேலும் தெலுங்கானா போராட்டத்தின் போது உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்குவோம். மக்களுக்காக அளித்த வாக்குகளை நிறைவேற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News