இந்தியா

காசியாபாத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி: உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள்

Published On 2024-04-06 13:12 GMT   |   Update On 2024-04-06 13:12 GMT
  • பிரதமர் மோடி உ.பியின் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
  • காரில் நின்றபடி வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அங்கு அவர் பேசுகையில், இந்தியா கூட்டணி கமிஷனுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டணி கட்சிகள் ஊழலில் மூழ்கிக் கிடக்கின்றன என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி சஹாரன்பூரில் இருந்து மாலை காசியாபாத் சென்றார். அங்கு 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.

காரில் நின்றபடி வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களைத் தூவி மகிழ்ந்தனர்.

மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ரோடு ஷோ நடந்தது. அதன்பின், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். இதில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News