பிரதமர் மோடி ஓய்வை அறிவிக்க ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றுள்ளார்: சஞ்சய் ராவத்
- பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?.
- பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றார். அங்கு சென்ற அவர் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து பேசினார். பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளதால், விரைவில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் "பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?. பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார். ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றிருந்தார். அடுத்த 2029ஆம் மக்களவை தேர்தலிலும் மோடிதான் பிரதமர் எனத் தெரிவித்திருந்தார்.