ஆற்று நீர் தொடர்பாக ஆந்திரா- தெலுங்கானா இடையே சர்ச்சை தேவையில்லை: சந்திரபாபு நாயுடு
- கடலில் கலக்கும் தண்ணீருக்கான இரண்டு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைக்கான தேவை என்ன?.
- சிலர் தண்ணீரை விரும்புவதில்லை. சர்ச்சைகளை விரும்புகிறார்கள்.
ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக தெலுங்கானாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி மீது குற்றம்சாட்டி வருகிறது. மேலும், ஆந்திராவுடன் இணைந்திருந்தபோதும் கூட அநீதி இழைக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ராயலசீமா நீர்ப்பாசன திட்டம் குறித்து குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், நதி நீர் தொடர்பாக ஆந்தியா- தெலுங்கானா இடையே சர்ச்சை தேவையில்லை என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
கடலில் கலக்கும் தண்ணீருக்கான இரண்டு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைக்கான தேவை என்ன?. சிலர் தண்ணீரை விரும்புவதில்லை. சர்ச்சைகளை விரும்புகிறார்கள். போலாவரம் திட்டம் நிறைவடைந்ததும் தெலுங்கான நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அரசாங்கத்தின் போது செய்யப்பட்ட 'தவறுகள்' சரிசெய்யப்பட்டுவிட்டன. வருவாய் தொடர்பான சர்ச்சைகளை தீர்க்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. சிலர் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். தவறுகளைச் செய்துவிட்டு, பழியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.