இந்தியா

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராகிறார் நிதிஷ் குமார்

Published On 2023-12-23 03:40 GMT   |   Update On 2023-12-23 03:40 GMT
  • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
  • இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.

பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.

லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.

Tags:    

Similar News