இந்தியா

நிறைமாத நிலவே வா வா... கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி ஊதிய வேலையை உதறிய இளைஞர்

Published On 2025-08-13 11:31 IST   |   Update On 2025-08-13 11:45:00 IST
  • 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார்
  • முதலில் என் அமணிவியிடம் வேலையை விடுமாறு கூறினேன்.

கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரூ.1.2 கோடி (வருடத்திற்கு) ஊதிய வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இளைஞர் ஒருவர் Reddit இல் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நான் WHF (WORK FROM HOME) முறையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் பெற்று வருகிறேன். 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து முதலில் அவளை வேலையை விட சொன்னேன். ஆனால் மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக்கொள்ள நான் வேலையை விட்டுவிட்டேன். வீட்டிலிருந்து மனைவியை கவனித்துக்கொள்ள போகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும் போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாக அந்த இளைஞரை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News