'பைக்'கில் ஆபத்தான சாகசம் செய்த வாலிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
- கங்கா தடுப்பணை பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ 10 வினாடிகள் ஓடுகிறது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காகவே வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சாகசங்களை செய்து அவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
கங்கா தடுப்பணை பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ 10 வினாடிகள் ஓடுகிறது. அதில், மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஆபத்தான முறையில் வீலிங் செய்யும் காட்சிகள் உள்ளது. வீடியோவின் பின்னணியில் ஒரு பஞ்சாபி பாடலும் இசைக்கப்படுகிறது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கான்பூர் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை மடக்கி பிடித்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ये कानपुर के लड़के भी पता नहीं कब सुधरेंगे । पुलिस का भी डर नही है । "बहन जी" को ये "गंगा बैराज पुल" ही नहीं बनना चाहिए था । डेली सब के सब "बाइक से स्टंट" करते है या तो इंस्टाग्राम की "रील" बनाते रहते है । #कानपुर #kanpur #BikeStunt #police #UPPolice pic.twitter.com/55NGK0Ni1g
— Shael Kumar (@ShaelKumar57183) March 27, 2024