இந்தியா

குல்காமில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இருவர் கைது.. ஆயுதங்கள் பறிமுதல்

Published On 2025-04-26 19:26 IST   |   Update On 2025-04-26 21:47:00 IST
  • குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
  • 25 ரவுண்ட் பிஸ்டல் வெடிமருந்துகள் மற்றும் இரண்டு பிஸ்டல் மேகஸின்கள்மீட்கப்பட்டன.

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒரு கூட்டு நடவடிக்கையில், குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றுடன் இணைந்து, பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் 2 பேரை செய்து, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றியது.

கைமோவின் தோகர்போராவில் உள்ள மதல்ஹாமா சௌக்கில் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கைமோவின் தோகர்போராவைச் சேர்ந்த பிலால் அகமது பட் மற்றும் முகமது இஸ்மாயில் பட் என அடையாளம் காணப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 25 ரவுண்ட் பிஸ்டல் வெடிமருந்துகள் மற்றும் இரண்டு பிஸ்டல் மேகஸின்கள் மீட்கப்பட்டன.

தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் கைமோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது. 

Tags:    

Similar News