இந்தியா

இந்தியாவில் புதிதாக 1,513 பேருக்கு கொரோனா ஜேஎன் 1 வகை தொற்று உறுதி

Published On 2024-01-21 14:50 GMT   |   Update On 2024-01-21 14:50 GMT
  • அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 382 பேருக்கு தொற்று பாதிப்பு.
  • உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து தலா ஒருவர் பாதிப்பு.

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கொரோனாவின் துணை மாறுபாடு வகை ஜேஎன்.1 தொற்று பாதிப்பின் புதிய எண்ணிக்கை 1,513 ஆகி பதிவாகியுள்ளது.

இந்திய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) அறிவிப்பின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்பட தொற்று பாதிப்பின் புதிய எண்ணிக்கை 1,513ஆக உள்ளது.

இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 382 பேரும், கர்நாடகாவில் 249 பேரும் ஜேஎன்1 வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, ஆந்திராவில் 189 பேரும், கேரளாவில் 156 பேரும், குஜராத்தில் 126 பேரும், மேற்கு வங்கத்தில் 96 பேரும், கோவா 90 பேரும், தமிழ்நாட்டில் 89 பேரும்,

ராஜஸ்தானில் 38 பேரும், தெலுங்கானாவில் 32 பேரும்,

சத்தீஸ்கரில் 25 பேரும், டெல்லியில் 21 பேரும், உத்தரபிரதேசத்தில் 9 பேரும், அரியானாவில் 5 பேரும், ஒடிசாவில் 3 பேரும், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News