இந்தியா

இமாச்சல பிரதேசம்: 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - பாஜகவில் இணைய வாய்ப்பு

Published On 2024-03-22 10:24 GMT   |   Update On 2024-03-22 12:12 GMT
  • 68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 35 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவை
  • இமாச்சல பிரதேசத்தில் காலியாகவுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெற்றிருப்பார்.

ஆனால், ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்.எல்.ஏ.-க்களை (25) கொண்ட பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார். அதனால் பா.ஜனதாவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

அம்மாநிலத்தில் காலியாகவுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 35 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆறு எம்.எல்.ஏ.-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் பலம் 34 ஆக குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது. பாஜகவில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக கூறி, 3 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

ஆனால் சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News