இந்தியா

மேற்கு வங்காளத்தில் வரும் 1ம் தேதி முதல் கனமழை எச்சரிக்கை

Published On 2025-09-29 15:57 IST   |   Update On 2025-09-29 15:57:00 IST
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.
  • 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக 12 பேர் பலியானார்கள். ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தல் செய்தியை அனுப்பி இருக்கிறார்.

அனைத்துத் துறையும் உயர்நிலை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News