இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது - பயணிகளை பத்திரமாக வெளியேற்றிய விமானி

Published On 2025-06-17 07:23 IST   |   Update On 2025-06-17 07:23:00 IST
  • ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மும்பைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது

கொல்கத்தா விமான நிலையத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு தரையிறங்கிய விமானம் எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் எஞ்சினின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படத்தால் அதிகாலை 5 மணியளவில் பயணிகள் கொல்கத்தாவில் இறக்கிவிடப்பட்டனர்.

முன்னதாக அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News