இந்தியா
நாடு முழுவதும் நீதிபதிகளுக்கு எதிராக 8,639 புகார்கள் - மத்திய அரசு தகவல்
- மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தெரிவித்தார்.
- 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு மொத்தம் 8,639 புகார்கள் வந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.
இதில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்கள் நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்படும் இத்தகைய புகார்கள், நீதித்துறையின் உள்விவகார நடைமுறை மூலமாகவே கையாளப்படுகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.