இந்தியா

தேர்தல் தோல்வி: கொடுத்த பணம், குக்கரை வாக்காளர்களிடம் இருந்து திருப்பிக்கேட்ட காங்கிரஸ் வேட்பாளர்

Published On 2026-02-13 16:39 IST   |   Update On 2026-02-13 16:39:00 IST
  • தெலுங்கானாவில் நகராட்சி தேர்தல் நடைபெற்றது.
  • காங்கிரஸ் வேட்பாளர் பணம் மற்றும் குக்கர்கள் வழங்கிய நிலையிலும் தோல்வியடைந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அஸ்வராவ்பேட்டா என்ற நகராட்சியிலும் தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 10-வது வார்டில் காங்கரிஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், வாக்கு சேகரித்தபோது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சமையல் குக்கர் போன்ற பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளார்.

ஆனால், தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. தனக்கு வாக்களிப்பாளர்கள் என்று பரிசுப் பொருட்கள் வழங்கினேன். ஆனால் எனக்கு வாக்களிக்கவில்லை. இதனால் வாக்காளர்கள் தான் வழங்கிய பரிசுப் பொருட்களை திரும்ப வழங்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் பரவியது.

இதனால் 10-வது வார்டு வாக்காளர்கள் கடும் கோபம் அடைந்தனர். அவர்கள் குக்கருடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

நாங்கள் ஒருபோதும் பணமே அல்லது குக்கரோ கேட்கவில்லை. இப்போது நாங்கள் ஏன் அவமானப் படுத்தப்படுகிறோம். என வாக்காளர்கள் கேட்டனர்.

இந்தக் கோரிக்கையால் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகவும், வேட்பாளர் தங்களை மிரட்ட முயற்சிப்பதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து பதற்றத்தை தனித்தனர்.

Tags:    

Similar News