இந்தியா

SIR வழக்கில் ஜனவரியில் இறுதி தீர்ப்பு- உச்சநீதிமன்றம்

Published On 2025-12-11 13:17 IST   |   Update On 2025-12-11 13:17:00 IST
  • மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
  • தலைமை நீதிபதி அமர்வு எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும்.

எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.

எஸ்ஐஆர் விவகாரத்தில் இதற்குமேல் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

எஸ்ஐஆர் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News