இந்தியா

இலங்கை அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Published On 2024-12-16 02:54 IST   |   Update On 2024-12-16 02:54:00 IST
  • இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இந்தியா வந்துள்ளார்.
  • அனுர குமார திசநாயக்கை மத்திய இணை மந்திரி முருகன் வரவேற்றார்.

புதுடெல்லி:

இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இந்தியா வந்துள்ளார்.

டெல்லி வந்தடைந்த அனுர குமார திசநாயக்கை மத்திய இணை மந்திரி எல்.முருகன் வரவேற்றார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தார்.

தனது சுற்றுப்பயணத்தில் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கிறார். அப்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News