இந்தியா

டெல்லி கார் வெடிப்பு: இழப்பின் வலியை எந்த வார்த்தைகளாலும் குறைக்க முடியாது - தலைமை நீதிபதி கவாய்

Published On 2025-11-11 13:47 IST   |   Update On 2025-11-11 13:47:00 IST
  • பேரழிவு துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், அவர்களை இழந்த அனைவருக்கும் தைரியமும் ஆறுதலும் கிடைக்கட்டும்.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பில் பலியானவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

டெல்லியில் நேற்று மாலை நடந்த கார் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்துள்ளோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

* உச்ச நீதிமன்றம் சார்பாக, இந்த பேரழிவு துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

* இத்தகைய இழப்பின் வலியை எந்த வார்த்தைகளாலும் உண்மையிலேயே குறைக்க முடியாது. இருப்பினும் இந்த துயரமான நேரத்தில் தேசத்தின் கூட்டு இரக்கமும் ஒற்றுமையும் சிறிது ஆறுதலை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

* துயரமடைந்தவர்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நீதியை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

* உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் நித்திய சாந்தியில் இளைப்பாறட்டும். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், அவர்களை இழந்த அனைவருக்கும் தைரியமும் ஆறுதலும் கிடைக்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News