இந்தியா

அரசு அனுமதி மறுத்த போதும் மணிப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற மகளிர் ஆணைய தலைவி

Published On 2023-07-23 06:48 GMT   |   Update On 2023-07-23 06:48 GMT
  • மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வருடன் விவாதிக்க உள்ளதாக கடிதம்.
  • பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்.

புதுடெல்லி:

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசவும் தீர்மானித்திருந்தார். ஆனால் அவரது பயணத்துக்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுத்துள்ளது. அவரது பயணத்தை தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டது. எனினும் ஸ்வாதி மாலிவால் திட்டமிட்டபடி இன்று மதியம் மணிப்பூருக்கு புறப்பட்டார்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரை இன்று சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும் ஸ்வாதி மாலிவால் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான பிரச்சனையை விவாதிக்க உங்களை அவசரமாகச் சந்திக்க விரும்புகிறேன். மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையில் இருந்து தப்பிக்க பல மணிப்பூரி பெண்கள் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்களின் நலன் தொடர்பான பிரச்சனைகளையும் உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். எனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும் என ஸ்வாதி மாலிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News