இந்தியா

ரூ. 15 ஆயிரம் அடிப்படை விலை கொண்ட தாவூத் இப்ராகிம் சொத்து.. ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

Published On 2024-01-05 16:18 GMT   |   Update On 2024-01-05 16:18 GMT
  • கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்.
  • விவசாய நிலங்கள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். இவர் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் மற்றும் இவரது குடும்பத்தாருக்கு சொந்தமான சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் உள்ள விவசாய நிலத்தை மத்திய அரசு ஏலத்தில் விட முடிவு செய்தது. அதன்படி ஏலம் இன்று நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாகே கிராமத்தில் இருந்த நான்கு விவசாய நிலங்கள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன.

இதில் இரண்டு நிலங்களை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனால், ரூ. 15 ஆயிரம் என்ற மிக குறைந்த விலையில் ஏலத்திற்கு வந்த நிலம் ரூ. 2.01 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் 170.98 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். இதே போன்று 1730 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மற்றொரு நிலம் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

தாவூத் இப்ராகிம் குடும்பத்தாருக்கு சொந்தமான நிலத்தை யார் வாங்கியது என்ற விவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டு உள்ளன. இன்று நடைபெற்ற ஏலத்திற்கு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News