இந்தியா
மருத்துவமனை கட்டுமான ஊழல்: டெல்லி முன்னாள் அமைச்சர் சௌரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
- ரூ.5,590 கோடி ஊழல் நடந்ததாக பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார்.
- முன்னாள் சுகாதார அமைச்சர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லியில் ஆம ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரப் பரத்வாஜின் இல்லம் உட்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.
ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவமனை கட்டுமானத் திட்டங்களில் முறைகேடுகள் மற்றும் பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
2018-19 காலகட்டத்தில், 11 புதிய மருத்துவமனைகள் மற்றும் 13 ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளின் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ரூ.5,590 கோடி ஊழல் நடந்ததாக 2024 இல் அப்போதைய பாஜக எதிர்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.