இந்தியா

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்ய சண்டிகர் நிர்வாகம் அழைப்பு

Published On 2025-05-10 15:51 IST   |   Update On 2025-05-10 15:51:00 IST
  • இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது.
  • பொதுமக்கள் ராணுவத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று மாநில நிர்வாகங்கள் கோரி வருகின்றன.

காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வரும் நிலையில் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் ராணுவத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில நிர்வாகங்கள் கோரி வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலால் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன்வருமாறு சண்டிகர் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

Tags:    

Similar News