இந்தியா

பீகார் சிறப்பு திருத்தம்: வரைவுப் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

Published On 2025-08-02 08:04 IST   |   Update On 2025-08-02 08:04:00 IST
  • பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
  • பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களில் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு இடங்களில் பதிவு செய்தவர்கள், பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 3.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சம்பாரண், மதுபனி மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். மேலும் பத்து மாவட்டங்களில் தலா 2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 13 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News