இந்தியா

தௌகீர் நிஜாமி AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசியுடன்

"முஸ்லீம்களில் காலணி நக்குபவர்கள், அடி வாங்குபவர்கள்..." - AIMIM தலைவரின் சர்ச்சை கருத்து!

Published On 2026-02-09 21:25 IST   |   Update On 2026-02-09 21:25:00 IST
  • மகாராஷ்டிராவில், 125 AIMIM கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
  • வன்முறையை ஊக்குவிப்பதற்காக அல்ல, மாறாக முஸ்லிம்களை "அடிமைத்தனத்திலிருந்து" விடுவிப்பதற்கான ஒரு முயற்சி

அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியைச் சேர்ந்தவர் தௌகீர் நிஜாமி. மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த இவர், AIMIM கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில் முஸ்லீம்கள் குறித்து இவர் சமீபத்தில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம்களில் "காலணி நக்குபவர்கள்", "காலணியால் அடி வாங்குபவர்கள்" மற்றும் "காலணியால் அடிப்பவர்கள்" என மூன்று வகைகள் இருப்பதாக தெரிவித்த அவர், காலணியை நக்கும் முஸ்லீம்கள் காங்கிரஸில் இருப்பதாகவும், காலணியால் அடி வாங்கும் முஸ்லீம்கள் பாஜகவில் இருப்பதாகவும், ஆனால் காலணியால் திருப்பி அடிப்பவர்கள் தங்களது கட்சியான மஜ்லிஸில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுதந்திரம் பெற்றதிலிருந்து காங்கிரஸ் முஸ்லிம்களை அடிமைத்தனத்தில் வைத்திருப்பதாகவும், முஸ்லீம்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க AIMIM மட்டுமே ஒரே வழி என்றும் பேசியுள்ளார். தனது அறிக்கை வன்முறையை ஊக்குவிப்பதற்காக அல்ல, மாறாக முஸ்லிம்களை "அடிமைத்தனத்திலிருந்து" விடுவிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளார். இவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுதியுள்ள நிலையில் இதற்கு மத்தியப்பிரதேச பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News