இந்தியா

விவேகானந்தர் காட்டிய பாதையில் செல்ல உறுதியேற்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

Published On 2024-01-12 08:46 GMT   |   Update On 2024-01-12 08:46 GMT
  • சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • சமூகத்தை பிளவுபடுத்துவது பாஜகவால் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை.

லக்னோ:

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,

"சமூகத்தை பிளவுபடுத்துவது பாஜகவால் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை. பாஜகவின் பாதை சகிப்புத்தன்மையும் அல்ல, உலகளாவிய அங்கீகாரமும் அல்ல.

இன்று சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும்போது, அவர் காட்டிய பாதையில் செல்ல உறுதியேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News