இந்தியா

குடியரசு தினவிழா: சாகசங்கள் படைத்த விமானப்படை

Published On 2024-01-26 09:06 GMT   |   Update On 2024-01-26 09:06 GMT
  • நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, கர்த்வயா பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

குடியரசு தின விழாவில் பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்

இந்நிலையில், விமானப்படை வீரர்கள், படை தலைவர் சுமிதா யாதவ் மற்றும் பிரதிதி அஹூவாலியா தலைமையில் அணிவகுத்துச் சென்றனர்.

ரபேல் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

விமானப்படையின் வலிமையை எடுத்துரைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட விமானப்படையின் அலங்கார ஊர்தியும் ஊர்வலத்தில் சென்றது.

Tags:    

Similar News