இந்தியா
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் எப்போது?- இன்று மதியம் தேதி அறிவிப்பு
- ஐந்து மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது
- ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பதவிக் காலங்கள் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடைய இருக்கின்றன.
இதனால் டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியது. ஐந்து மாநிலங்களுக்கும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து, தேர்தல் நடத்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று மதியம் ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி டெல்லியில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தேர்தல் தேதியை வெளியிடுவார்.
ராஜஸ்தானில் காங்கிரசும், மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வருகிறது.