இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30 கிலோ தங்கம் மாயமா?

Published On 2025-10-04 12:23 IST   |   Update On 2025-10-04 12:23:00 IST
  • ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கத்தை விஜய் மல்லையா வழங்கினார்.
  • விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் பணிகளுக்காக 27 ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.3 கிலோ தங்கம் மாயமானதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 4, 1998 அன்று, சபரிமலையில் உள்ள கருவறை, கூரை மற்றும் துவாரபாலக சிற்பங்கள் ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கம் மற்றும் 1,900 கிலோ செம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.. இந்த தங்கத்தை தொழிலதிபர் விஜய் மல்லையாவால் பரிசாக அப்போது வழங்கினார்.

இந்நிலையில், சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 2 துவார பாலகர் சிலைகளில் இருந்த தகடுகளில் தங்கம் எதுவும் இல்லை, அவை செம்புத் தகடுகள் என பழுது பார்க்கும் நிறுவனம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.

Tags:    

Similar News