இந்தியா
மேற்கு வங்கத்தில் SIR பதற்றத்தால் தினசரி 4 முதல் 5 பேர் தற்கொலை செய்கின்றனர்: மம்தா விமர்சனம்
- SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பதற்றம் காரணமாக தினசரி 4 முதல் 5 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தனை வருங்களுக்குப் பிறகு, நாம் நாட்டின் குடிமக்களா? என நிரூபிக்க வேண்டியுள்ளது.
சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட திட்டக்குழுவை, மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக நிதி ஆயோக்கை கொண்டு வந்துவிட்டது. போஸின் பிறந்தநாள் இன்னும் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.