செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

Published On 2019-05-08 11:02 GMT   |   Update On 2019-05-08 11:02 GMT
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். #MilitantsAttack
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சைனபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இன்று திடீரென நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றோம் என போலீசார் தெரிவித்தனர். #MilitantsAttack
Tags:    

Similar News