செய்திகள்

அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது நடிப்பு உதவாது - காங்கிரஸ் தலைவர் ராகுல்

Published On 2019-04-25 00:46 GMT   |   Update On 2019-04-25 00:46 GMT
“அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதை காவலாளி உணர வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #AkshayKumar
புதுடெல்லி:

பிரதமர் மோடி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மனம் திறந்த பேட்டி அளித்தார்.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், “அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதை காவலாளி உணர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் திரைப்பட துறையில் மாற்று வேலை வாய்ப்பை நாடுவதுபோல தெரிகிறது. அக்‌ஷய் குமார் சிறந்த நடிகர். நம் அனைவருக்கும் அவரை பிடிக்கும். தோற்றுப்போன அரசியல்வாதி, அக்‌ஷய் குமாரை விட சிறந்த நடிகர் ஆக முயற்சிக்கிறார்” என கூறினார்.  #RahulGandhi #PMModi #AkshayKumar

Tags:    

Similar News