செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி

Published On 2019-04-22 01:17 IST   |   Update On 2019-04-22 01:17:00 IST
அரியானா மாநிலம் சோனிபட் தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #BhupinderSinghHooda
சண்டிகர்:

பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

அரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 6-வது கட்டமாக மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலத்தின் சோனிபட் பாராளுமன்ற தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா போட்டியிட உள்ளார். மேலும், முன்னாள் சட்டசபை சபாநாயகர் குல்தீப் சர்மா கர்னால் தொகுதியிலும், முன்னாள் முதல் மந்திரி பஜன் லாலின் பேரனான பாவ்யா பிஷோனி ஹிசார் தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #BhupinderSinghHooda
Tags:    

Similar News