செய்திகள்
தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவில்லை - குஷ்பு பேட்டி
தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
பெங்களூரு:
நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று சொன்னேனா? எனக்கு இதுபோன்ற வதந்திகள் புதிதல்ல. தி.மு.க.வில் இருக்கும்போது 2011-ல் இதே பேச்சு வந்தது. 2014, 2016 மற்றும் 2019 வரை இதே பேச்சு தொடர்ந்து கொண்டிருகிறது. எனக்கு இது பழக்கம் ஆகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் சீட் கொடுக்கவில்லை. அதனால் குஷ்பு வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். நான் எப்போது சீட் கேட்டேன்? தி.மு.க.விலோ, காங்கிரசிலோ இதுவரை நான் சீட்டு கேட்டதேயில்லை.
நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர். அது தொடர்பான பணிகளே நிறைய இருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.
தேசிய பொறுப்பில் இருப்பதால் இந்தியா முழுவதும் சென்று கொண்டிருக்கிறேன். அதற்காக நான் செல்லும் இடமெல்லாம், நானும் ஜெயிலுக்கு போறேன் என்று தண்டோரா போட முடியாது என்னைப் பற்றி கட்சிக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று சொன்னேனா? எனக்கு இதுபோன்ற வதந்திகள் புதிதல்ல. தி.மு.க.வில் இருக்கும்போது 2011-ல் இதே பேச்சு வந்தது. 2014, 2016 மற்றும் 2019 வரை இதே பேச்சு தொடர்ந்து கொண்டிருகிறது. எனக்கு இது பழக்கம் ஆகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் சீட் கொடுக்கவில்லை. அதனால் குஷ்பு வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். நான் எப்போது சீட் கேட்டேன்? தி.மு.க.விலோ, காங்கிரசிலோ இதுவரை நான் சீட்டு கேட்டதேயில்லை.
நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர். அது தொடர்பான பணிகளே நிறைய இருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.
தேசிய பொறுப்பில் இருப்பதால் இந்தியா முழுவதும் சென்று கொண்டிருக்கிறேன். அதற்காக நான் செல்லும் இடமெல்லாம், நானும் ஜெயிலுக்கு போறேன் என்று தண்டோரா போட முடியாது என்னைப் பற்றி கட்சிக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Kushboo