செய்திகள்

போர் பதற்றமான சூழ்நிலையிலும் எல்லைப்பகுதியில் பாக்.படைகள் 7வது நாளாக அத்துமீறி தாக்குதல்

Published On 2019-02-28 11:08 GMT   |   Update On 2019-02-28 11:08 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்றும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினர். #Pakistanfires #PoonchLoC #IndianArmy
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று மதியம் 2,15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்கினர். 

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி தந்தனர்.

தற்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையிலும், பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து ஏழாவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.  #Pakistanfires #RajouriLoC #IndianArmy 
Tags:    

Similar News