என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் படைகள்"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்றும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினர். #Pakistanfires #PoonchLoC #IndianArmy
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.
     
    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று மதியம் 2,15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்கினர். 

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி தந்தனர்.

    தற்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையிலும், பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து ஏழாவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.  #Pakistanfires #RajouriLoC #IndianArmy 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் ஆறாவது நாளாக இன்றும் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். #Pakistanfires #PoonchLoC #IndianArmy
    ஜம்மு:

    நமது நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.
     
    அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட பூஞ்ச் மாவட்டம், மெண்டோர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று இரவு 7 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்தனர்.

    தொடர்ந்து ஆறாவது நாளாக பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி வருவதால் எல்லைகோட்டுப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.  #Pakistanfires #RajouriLoC #IndianArmy 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #jammukashmir #PakistanArmyViolates
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள ஆர்எஸ் பூரா - அரினா பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் படைகள் அத்துமீறி பயங்கர தாக்குதல் நடத்தினர். மோர்டார்ஸ் மற்றும் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற இந்த தாக்குதல் சிறிது நேரத்திற்கு பின் முடிவடைந்தது.

    இருப்பினும் இந்த தாக்குதலில் இந்திய வீரர் சீதாராம் உபதாய் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் காயமடைந்தார். அதில் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அரினா பகுதியில் இரண்டு பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.



    ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஜம்மு-காஷ்மீரில் எவ்வித தாக்குதலும் நடத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #jammukashmir #PakistanArmyViolates

    ×