ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் விஜய்
- ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்தார்.
- புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்தார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தில் அணிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியில் பின்வரும் முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
பொறுப்பாளர்:
ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர்
ஒருங்கிணைப்பாளர்கள்:
எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு
ஜே.கேத்ரின் பாண்டியன், திருநெல்வேலி
தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
பெலிக்ஸ் ஜெரால்டு, சென்னை
வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், சென்னை
எம்.கே.தேன்மொழி பிரசன்னா, மதுரை
மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
முகில் வீரப்பன் (எ) மு. சு.சிவகுமார். புதுக்கோட்டை
அமலன் சாம்ராஜ் பிரபாகர், சென்னை
க.சி.தி. அனந்தஜித் மகியா. திருவள்ளூர்
மு. ஞான செல்வின் இன்பராஜ், செங்கல்பட்டு
முகமது இப்ராஹிம், சென்னை
ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், சென்னை
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து. எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.