செய்திகள்

ஐந்தாவது நாளாக காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு

Published On 2019-01-10 09:38 GMT   |   Update On 2019-01-10 09:38 GMT
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளின் மீது தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. #LoC #ceasefire #PoonchLoC
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த பத்து நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் குல்பூர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ராணுவ உயரதிகாரி குறிப்பிட்டார்.

மேலும், ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். #LoC #ceasefire #PoonchLoC
Tags:    

Similar News