செய்திகள்

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Published On 2019-01-08 15:02 GMT   |   Update On 2019-01-08 15:02 GMT
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi
புதுடெல்லி:

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.

இதேபோல பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் வரும் பாராளுன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிவருகிறார். 

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார். 

ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் எதிர்துருவங்களாக இருக்கும் கட்சிகளாகும். பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த இரு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசவுள்ளார். #ChandrababuNaidu #RahulGandhi
Tags:    

Similar News