செய்திகள்

மந்திரிகள் மீது வெங்காயத்தை வீசுங்கள்: ராஜ்தாக்கரே

Published On 2018-12-20 02:22 GMT   |   Update On 2018-12-20 02:22 GMT
உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மந்திரிகள் மீது வெங்காயத்தை வீசுங்கள் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். #RajThackeray
மும்பை :

மராட்டியத்தில் விலை வீழ்ச்சியால் வெங்காய விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் விவசாயி ஒருவர் வெங்காயம் விற்றதில் குறைவான பணம் கிடைத்ததால், அந்த பணத்தை அப்படியே பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் வெங்காயம் அதிகம் விளையும் நாசிக் மாவட்டத்தில் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சுற்றுப்பயணம் செய்தார். அங்குள்ள கல்வான் பகுதியில் வெங்காய விவசாயிகள் மத்தியில் அவர் பேசுகையில், உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மந்திரிகள் மீது வெங்காயத்தை வீசுங்கள் என்று கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajThackeray
Tags:    

Similar News