உலகம்

புதின் அழிந்து போகட்டும்: கிறிஸ்துமஸ் உரையில் விருப்பத்தை தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Published On 2025-12-25 18:58 IST   |   Update On 2025-12-25 18:58:00 IST
  • இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம்.
  • புதின் அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் உரையாற்றினார். அப்போது மறைமுகமாக ரஷிய அதிபர் புதின் அழியட்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ உரையில் கூறியிருப்பதாவது:-

ரஷியா ஏற்படுத்திய அனைத்து துன்பங்களுக்கும் மத்தியிலும், மிகவும் முக்கியமானவற்றை ஆக்கிரமிக்கவோ அல்லது குண்டுவீசி அழிக்கவோ அதனால் முடியாது. அதுதான் எங்கள் உக்ரேனிய மக்களின் இதயம், ஒருவருக்கொருவர் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மற்றும் எங்கள் ஒற்றுமை.

இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் எங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு ஆசைதான் உள்ளது. அவன் (புதின் பெயரை குறிப்பிடாமல்) அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆனால் நாம் கடவுளை நோக்கித் திரும்பும்போது, நிச்சயமாக, நாம் இன்னும் பெரிய ஒன்றைக் கேட்கிறோம். நாங்கள் உக்ரைனுக்காக அமைதியைக் கேட்கிறோம். அதற்காக நாங்கள் போராடுகிறோம், அதற்காகப் பிரார்த்திக்கிறோம், அது எங்களுக்கு உரித்தானது.

இவ்வாறு ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News