இந்தியா

சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு கட்டுப்பாடு

Published On 2025-12-26 00:04 IST   |   Update On 2025-12-26 00:04:00 IST
  • சமூக வலைதளங்களில் செய்திகளைப் பார்க்க, கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி:

கடந்த சில ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் கசிவு, தவறான தகவல் பரவல், சைபர் உளவு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களைப் பாதுகாப்பதற்காக காலத்திற்கு ஏற்ப விதிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராணுவத்தினர் இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் செய்திகளைப் பார்க்கவும், கண்காணிக்கவும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

ராணுவ நடவடிக்கைகள், படை நகர்வு, பயிற்சி விவரங்கள், ஆயுதங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட அதிகாரபூர்வ அல்லது உள்துறை தகவல்கள் தவறுதலாக கூட வெளியாவதைத் தடுக்கவே இந்த முடிவு என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News