செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி

Published On 2018-11-23 03:37 GMT   |   Update On 2018-11-23 03:37 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 6 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். #JKEncounter
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து இன்று அதிகாலையில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருந்த வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில்  தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அப்பகுதியில்  மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  #JKEncounter

Tags:    

Similar News