செய்திகள்
நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி மனு - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Nirbhaya #SupremeCourt
புதுடெல்லி:
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, டெல்லியில், ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை கடந்த ஜூலை 9-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இருப்பினும், 4 பேருக்கும் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதை உடனே நிறைவேற்ற உத்தரவிடக்கோரி, அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார். #Nirbhaya #SupremeCourt
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, டெல்லியில், ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை கடந்த ஜூலை 9-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இருப்பினும், 4 பேருக்கும் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதை உடனே நிறைவேற்ற உத்தரவிடக்கோரி, அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார். #Nirbhaya #SupremeCourt