செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

Published On 2018-10-04 23:40 IST   |   Update On 2018-10-04 23:40:00 IST
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். #CeasefireViolation
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் மற்றும் காதி கர்மா பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அவர்கள் துப்பாக்கிகளால் சுமார் 30 முதல் 40 ரவுண்டுகள் வரை சுட்டனர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் 
ஏற்படவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது  
குறிப்பிடத்தக்கது. #CeasefireViolation
Tags:    

Similar News