செய்திகள்

பிரதமர் மோடி, ராகுல் மீது அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

Published On 2018-09-16 19:20 GMT   |   Update On 2018-09-16 19:20 GMT
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரையும் டெல்லி மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். #ArvindKejriwal #NarendraModi #RahulGandhi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதுபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டார்.



இந்நிலையில், இதற்காக இருவரையும், டெல்லி மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி இருப்பதாவது:-

ராகுல் காந்தி கோவில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். மோடி, தற்போது மசூதிகளில் இருக்கிறார். மக்களுக்கு பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, சாலை, மின்சாரம், குடிநீர் ஆகியவை அளிப்பதன் மூலம் மட்டுமே தேசத்தை கட்டி எழுப்ப முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #ArvindKejriwal #NarendraModi #RahulGandhi
Tags:    

Similar News