செய்திகள்

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை தின்ற நேரு பண்டிதரா? - ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ கேள்வி

Published On 2018-08-11 10:37 GMT   |   Update On 2018-08-11 10:37 GMT
சர்ச்சை கருத்துக்களால் தன்னை பிரபல படுத்த முயலும் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா, தற்போது மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் உண்ட நேரு பண்டிதரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். #GyanDevAhuja #BJP
ஜெய்ப்பூர்:

சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அஹுஜா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சியும், பன்றியின் இறைச்சியும் உண்டதால் அவர் பண்டிதர் அல்ல என தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் எதிர்க்கப்பட்டும், சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டும் வருகிறது.

முன்னதாக, பசு காவலர்கள் என்ற பேரில் நடத்தப்பட்ட கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவாக, பசுவை கடத்துவதும், கொலை செய்வதற்குமான தண்டனையை அவர்கள் பெற வேண்டும் என கருத்து தெரிவித்தவர் கியான் தேவ் அஹுஜா என்பது குறிப்பிடத்தக்கது. #GyanDevAhuja #BJP
Tags:    

Similar News