என் மலர்

    நீங்கள் தேடியது "gyan dev ahuja"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சர்ச்சை கருத்துக்களால் தன்னை பிரபல படுத்த முயலும் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா, தற்போது மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் உண்ட நேரு பண்டிதரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். #GyanDevAhuja #BJP
    ஜெய்ப்பூர்:

    சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அஹுஜா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சியும், பன்றியின் இறைச்சியும் உண்டதால் அவர் பண்டிதர் அல்ல என தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் எதிர்க்கப்பட்டும், சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டும் வருகிறது.

    முன்னதாக, பசு காவலர்கள் என்ற பேரில் நடத்தப்பட்ட கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவாக, பசுவை கடத்துவதும், கொலை செய்வதற்குமான தண்டனையை அவர்கள் பெற வேண்டும் என கருத்து தெரிவித்தவர் கியான் தேவ் அஹுஜா என்பது குறிப்பிடத்தக்கது. #GyanDevAhuja #BJP
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்துக்கள் புனிதமாக வணங்கும் பசுவை கொல்வது பயங்கரவாதத்தை விட பெரிய குற்றமாகும் என ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #GyanDevAhuja
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் ராம்கர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கியான் தேவ் ஆஜா. இவெ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:

    பயங்கரவாத செயல்களால் இரண்டு அல்லது மூன்று பேர் பாதிக்கப்படுவார்கள். ஆனால், பசுவை கொன்று கொடுமைப்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கிலான மக்களின் உணர்வுகள் புண்படுகிறது.

    எனவே, பசுவை கொல்வது என்பது பயங்கரவாதத்தை விட மிக பெரிய குற்றமாகும் என பேசினார். இவரது கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் பசுவை கொன்றதாக கூறப்படும் அக்பர் கானை தாக்கி கொன்ற விவகாரத்தில் தொடர்புடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #BJPMLA #GyanDevAhuja
    ×