செய்திகள்

டாக்டரை கற்பழிக்க முயன்று தப்பி ஓடியவர் தவறி விழுந்து பலி

Published On 2018-08-07 14:57 IST   |   Update On 2018-08-07 14:57:00 IST
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டரை கற்பழிக்க முயன்றவர் தப்பி ஓடிய போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:

மும்பையில் மலாடு என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் முதல் மாடியில் செரியன் எலன் (வயது 60) என்பவர் வசித்து வருகிறார்.

அதே குடியிருப்பில் 2-வது மாடியில் பெண் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். அந்த டாக்டர் பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது செரியன் எலன் நைசாக பெண் டாக்டரை பின்தொடர்ந்து வந்தார். டாக்டர் தனது வீட்டு கதவை திறந்து உள்ளே சென்ற போது, திடீரென செரியன் எலனும் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.

பின்னர் கதவை பூட்டி விட்டு டாக்டரை கற்பழிக்க முயன்றார். இதனால் அவர் கூச்சலிட்டார். ஆத்திரம் அடைந்த செரியன் எலன் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து டாக்டரின் தலையில் அடித்தார். இதில், ரத்தம் கொட்டியது. அவர் அலறினார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே செரியன் எலன் வீட்டில் இருந்து தப்பி ஓடினார்.

அருகில் இருந்த மாலுக்குள் நுழைந்த அவர் மாடியில் ஏறி சென்றார். அவரை மற்றவர்கள் விரட்டி சென்றனர். அப்போது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். இது சம்பந்தமாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காயம் அடைந்த டாக்டர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #tamilnews
Tags:    

Similar News