செய்திகள்

தேர்தல்களுக்காக மட்டுமே மோடி இந்தியாவுக்கு திரும்பி வருகிறார் - உத்தவ் தாக்கரே

Published On 2018-05-23 19:33 GMT   |   Update On 2018-05-23 19:33 GMT
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து இங்கு திரும்பி வருகிறார் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். #PalgharBypoll #UddhavThackeray #PMModi,
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், வசாய் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் எனக்கூறி பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறார். அவர் இங்கு நடைபெறும் தேர்தல்களுக்காக மட்டுமே திரும்பி வருகிறார். தேர்தல்கள் முடிந்ததும் மீண்டும் வெளிநாடு சென்று விடுகிறார்.



இங்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ள உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் உங்கள் சொந்த தொகுதியில் தோற்றுப் போனதை அவரிடம் யாராவது எடுத்துக் கூறினால் நல்லது என தெரிவித்தார். #PalgharBypoll #UddhavThackeray #PMModi,
Tags:    

Similar News