செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை

Published On 2018-05-15 13:33 GMT   |   Update On 2018-05-15 13:33 GMT
ஜம்மு காஷ்மீரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஜ்பெகாரா பகுதியில், போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பிலால் அகமது என்ற காவல்துறை அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, பயங்கரவாதிகளை கண்டறிந்து களையெடுக்க, அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். #militantattack #policemanshoted
Tags:    

Similar News