செய்திகள்

காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு எதிரான முத்தலிக் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி

Published On 2018-05-10 14:57 IST   |   Update On 2018-05-10 14:57:00 IST
மதம் ரீதியாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #karnatakaelection2018 #SCdismisses #pleaagainstCongress
புதுடெல்லி:

கர்நாடகாவில் நாளை மறுநாள் (12-ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க, பெங்களூரு நகருக்கென தனித் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், ராஷ்டிரிய இந்து சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, மதம் ரீதியாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் அமைந்துள்ளது எனவும், இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து, தேசிய கட்சிகளின் பட்டியலிலிருந்து காங்கிரசை நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தேர்தல் பணிகள் துவங்கிய பின்னர், நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. எனினும் தேர்தல் நடைமுறைகள் முடிந்தபிறகு, முத்தலிக் சட்டரீதியாக நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். #karnatakaelection2018 #SCdismisses #pleaagainstCongress
Tags:    

Similar News